அவசரம்: அனைத்து வலைப்பதிவர்களுக்கும் ஒரு உருக்கமான வேண்டுகோள்!
இரண்டு மாணவிகள் கையில் பணமின்றி வேறுவழியும் தெரியாமல் மரணத்தை தழுவியதாகவும் அறிகிறோம். இவ்வாறு தத்தளிக்கும் நம் தமிழ் மாணவர்களை அரசியல் விருப்பு வெறுப்பின்றி ஆதரவுக்கரம் நீட்டி அரவணைப்பது என்பது தமிழராய் பிறந்த, உணர்ந்த நம் அனைவருக்குமான வரலாற்று கடமையாகும். இப்பணியில் எம் நண்பர்கள் சிலர் இறங்கியுள்ளார்கள். இதுவரை 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவிகள் உதவிக்காக அடையாளம் காணப்பட்டு காத்திருக்கிறார்கள். அவர்களில் 80க்கும் மேற்பட்டோர் தற்போது எம் புலம் பெயர் நண்பர்களால் உதவியளிக்கப்பட்டு தங்களது படிப்பை தொடர்கிறார்கள்... மற்றவர்கள் என்று உதவிவரும் என்று எதிர்பார்த்து உண்ண உணவுக்குகூட வழியற்று காத்திருக்கிறார்கள். எனவே தமிழர்களே, வலைப்பதிவர்களே நாம் அனைவரும் நம்மால் இயன்ற ஒரு சிறு தொகையை இம்மாணவர்களுக்காக திரட்டி அளிக்கவேண்டிய அவசரத்தில் அவசியத்தில் உள்ளோம் என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ் வரலாற்றுக் கடமையில், மனிதாபிமான உதவியில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் பதிவர்கள், திரட்டிகள், அமைப்புகள், வாசகர்கள், தமிழ் உணர்வாளர்கள் போன்றவர்கள் சர்வதேச தமிழ்மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்மின தோழன் ரிஷியை funds4students@googlemail.com என்ற மின்னஞ்சல் மூலமாக [ தொலைபேசி எண்: (044)7551449606 ] தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் இருக்கும் பதிவர்கள் , மாணவர்கள், மாணவ அமைப்புகள் இதை ஒரு இடரகற்றும் முயற்சியாகக் கருதி செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
"இருப்பவர்களையாவது காப்போம்... நம் சிறு உதவிகளால்... நன்றி!"

Comments
Post a Comment